Vegetable Clinic Call Toll Free : 1800 889 1667
காய் இருக்க பயமேன் காய்கறிகளை சமைத்தால் உணவாகிறது காய்கறிகளை அரைத்து சாறாக பருகினால் மருந்தாகிறது. காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் ஞானமாகிறது. மேன்மையான குணங்களை தன்னகத்தே பெற்றுள்ளதால் இறைவனுக்கு நன்றி செலுத்த காய்கறிகள் படைக்கப்படுகிறது. பிறவிக்குறைகளையும் நீக்கும் வல்லமை படைத்ததால் காய்கறிகளை நீத்தோருக்கு படையலாக்கி அவர்களுக்கு ஞாபகமூட்டப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளதால் உடலை கழிவில்லா பொக்கிஷமாக்கிறது. ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் உடலை பலமாக்குகிறது. அதாவது நோய் வராது வரும் முன் காக்கின்றது. ஆங்காங்கே கிடைக்கும் காய்கறிகள் தானியங்கிகளுக்கு மாற்றாக சத்தான உணவாகின்றது. காய்கறிகளின் கழிவுகளை கொண்டு சிறிய அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் உள்ள கழிவுகள் விவசாயத்திற்கு உரமாகின்றது. பிரித்தெடுத்த நார்ப்பொருட்களை கொண்டு பல தொழில் நுட்பத்தின் துணையால் பல்வேறு பொருட்களை தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றது. காய்கறிகளை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த முடியும். அதற்கு உதாரணம் இராஜஸ்தானில் விளையும் கொத்தவரங்காயை ஏற்றுமதி செய்யப் படுவதால் அம்மாநிலத்தின் தனி நபர் வருமானம் மேம்பட்டுள்ளது. நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதில் காய்கறிகள் அங்கம் வகிக்கின்றது. இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள காய்கறிகளை முழுமையாக நாம் பயன்படுத்துகின்றோமா? என்றால் நிச்சயம் இல்லை. தேங்காயை வழிபடும் ஓர் இனம் அதன் மேல் தோஷம் போடுவது அறிவியலா? அல்லது அறியாமையா? என்று சிந்தித்து செயல்படவேண்டிய தருணம் இது. நாட்டுக் காய்கறிகள் வீர்யம் வாய்ந்தது. உதாரணத்திற்கு ஜீரண மண்டலத்திற்கு வெண் பூசணிக்காய், சிறுநீரக மண்டலத்திற்கு கத்திரிக்காய், நரம்பு மண்டலத்திற்கு கொத்தவரங்காய், வாயு மண்டலத்திற்கு புடலங்காய், தசை மண்டலத்திற்கு அரசாணிக்காய், தோல் மண்டலத்திற்கு கோவைக்காய், சுவாச மண்டலத்திற்கு முருங்கைக்காய், நிணநீர் மண்டலத்திற்கு பீர்க்கங்காய், எலும்பு மண்டலத்திற்கு தேங்காய், நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்கு எலுமிச்சை, நாளமுள்ள சுரப்பி மண்டலத்திற்கு வெண்டைக்காய், இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வாழைக்காய், என உடலின் முக்கியமான மண்டலத்திற்கு இந்த காய்கறிகளின் பங்கு அவசியமாகின்றது. --------------------------------------------------------------------------- காய்கறிகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி காய்கறிகளையே மருந்து சீட்டாக கொடுக்கும் ஒரே வைத்திய சாலை அதுவே யோகேஸ்வர் காய்கறி வைத்தியமுறை (Yogeshwar Vegetable Clinic). இதன் நிறுவனர் பி.கே. அருண் பிரகாஷ் என்னும் இவர் ஆயுர்வேத மருத்துவம் செய்யும் போது அதனுடன் நாட்டுக்காய்கறிகளை சேர்த்து பரிந்துரைக்கும் போது குறுகிய காலத்தில் அதன் பலன் பல மடங்காக கிடைத்தது. இதன் மகத்துவத்தை உணர்ந்து அதைப்பற்றி தேடுதல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இன்று அதனை ஒரு வைத்தியமுறையாக வடிவமைத்துள்ளார். பல மாதங்கள் ஆகியும் தீர்வு பெறாத விஷயங்கள் கூட சில நாட்களில் குணமாகிறது ஒரு அதிசயம் என்று உரக்க சொல்கிறார். எண்ணிலடங்கா நோய்கள் பற்றிய பயத்திற்கு 12 விட்டமின்கள் மட்டுமே நிவாரணம் என்றும் அவை அனைத்தும் உலகிலேயே நம் பாரத நாட்டு காய்கறிகளில் மட்டுமே காண முடியும் என்றும் பாரத மண்ணின் பெருமையை விண்ணிற்கு உயர்த்திப்பேசுகிறார். --------------------------------------------------------------------------- முக்கியமாக பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிக எளிமையான தீர்வுகள் உண்டு என்று அதனை 12 நாட்டு காய்கறிகளுடன் பட்டியலிட்டு காய்கறியும் பெண்மையும் என்ற தலைப்பில் கூறுகிறார். காய்கறியும் பெண்மையும் கர்பப்பையை கர்ப்பக்கிரஹமாக்கிட - தேங்காய் வழியில்லாத மாதவிடாய்க்கு வழிகாட்டிட – கொத்தவரங்காய் மலடை மலடாக்கி பெண்ணை தாயாக்கிட - கத்திரிக்காய் முடிவில்லா போக்கை முடித்து கட்டிட - பீர்க்கங்காய் முன்னதாக வரும் போக்கை வன்மையாக மறுக்கும் -வெண்பூசணிக்காய் தாமதமாகும் போக்கை முறித்துவிடத் துடிக்கும் – முருங்கைக்காய் அதிக இரத்தப் போக்கிற்கு நிவாரணம் - வாழைக்காய் அதிக வெள்ளைப்போக்கிற்கு பரிகாரம் - கோவைக்காய் தடையில்லாமல் தாய்ப்பால் சுரந்திட – புடலங்காய் தடைப்பட்ட மாதவிடாய் உடைத்தெறிந்திட - எலுமிச்சை கட்டியான உதிரப்போக்கை தட்டி கேட்டிட - வெண்டைக்காய் சுகமான பிரசவத்தை நிகழ்த்திக்காட்டிட – அரசாணிக்காய் பெண்மைக்கு வாழ்வு தரும் நாட்டுக்காய்கறிகளை பெண்களே விரும்பாமல், உண்ணாமல் மறுப்பதேன்? நோயைப்பற்றிய பயமில்லாத வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாத இந்த காலகட்டத்தில் நம்பிக்கையுடன் வாழவைக்கும் இக்காய்கறிகள் இருக்க நமக்கு பயமேன்… உலகிற்கு பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை ஒரு தாயாக இருந்து கற்ப்பித்த பூமி நம் பாரத பூமி. சைவத்தின் அடிப்படையில் உணவு, அறநெறிப்படி பொருள் மற்றும் அன்பு வழியில் உறவு, இம்மூன்றும் அல்லாத கருத்தைப்பற்றி அறியாதவர்கள் பாரதவாசிகள். --------------------------------------------------------------------------- ஆரோக்கியத்திற்கு சைவ உணவை பின்பற்றினர். மனிதனுடைய பற்கள் மற்றும் குடல் அமைப்பானது நார்ச்சத்து இல்லாத மாமிச உணவிற்கு பொருத்தமாகாது. முகலாய மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் சைவ உணவை விட அசைவ உணவு தான் பலம் தரும் என்று வைக்கப்பட்டது உண்மையில். • நார்ச்சத்து நிறைந்த கொத்தவரங்காயில் உள்ள புரதம் மிக சிறந்தது. • நார்ச்சத்து நிறைந்த தேங்காயில் உள்ள கொழுப்பு மிகப் பாதுகாப்பானது. • நார்ச்சத்து நிறைந்த வாழையில் உள்ள மாவுச்சத்து முழுமையானது. • நார்ச்சத்து நிறைந்த முருங்கையில் உள்ள ஊட்டச்சத்து மிக வீர்யம் வாய்ந்தது. • நார்ச்சத்து நிறைந்த எலுமிச்சை தோலில் உள்ள கால்சியம் சக்தி வாய்ந்தது. • நார்ச்சத்து நிறைந்த அரசாணி விதையில் உள்ள மெக்னீசியம் பலம் படைத்தது. • நார்ச்சத்து நிறைந்த கோவைக்காயில் உள்ள வைட்டமின் ஏ எதற்கும் நிகரற்றது. • நார்ச்சத்து நிறைந்த கத்திரிக்காயில் உள்ள காரத்தன்மை சளி அறுப்பது. • நார்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காயில் உள்ள சதைப்பகுதி மென்திசு வளர்ப்பது. • நார்ச்சத்து நிறைந்த வெண்டையில் உள்ள நீர்ச்சத்துதான் உயிர் காப்பது. • நார்ச்சத்து நிறைந்த வெண்பூசணியில் உள்ள உப்புச்சத்து இரணம் காப்பது. • நார்ச்சத்து நிறைந்த புடலையில் உள்ள வேதிப்பொருள் அகத்தை சீராக்குவது. --------------------------------------------------------------------------- நார்ச்சத்து எவ்விதத்தில் தவிர்க்க இயலாதது என்பதை சற்று பார்ப்போம். 1. கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. 2. கரையாத நார்ச்சத்து இரத்த கொதிப்பை சீராக்குகிறது. 3. நார்ச்சத்து உள்ள உணவானது நரம்பு மற்றும் தசை நார்களை வலிமையாக்குகிறது. 4. நார்ச்சத்து குடலில் வாயுக்களை நீக்கி வயிறு உப்புசத்தை தவிர்க்கிறது. 5. கரையாத நார்ச்சத்து குடலின் வேலை சுமையை குறைக்கின்றது. 6. நார்ச்சத்து உடலில் உள்ள கார அமிலத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது. இந்த ஆறு பணிகளையும் நார்ச்சத்து இல்லாத அசைவ உணவுகளால் முழுமையாக செயல்படுத்தமுடியாது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. --------------------------------------------------------------------------- நார்ச்சத்து இல்லாத அசைவ உணவால் உலக மக்கள் சந்திக்கும் மூன்று பெரும் பிரச்சனைகளை இயற்கை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு கூறுகின்றார்கள். அவை பின் வருமாறு:- 1. நீர் நிலைகள் அதிகம் வீணாக்கப்படுவது. 2. உணவு உற்பத்தி செலவு பல மடங்கு அதிகமாவது. 3. தீர்க்க முடியாத இருதய மற்றும் தோல் நோய்கள் பரவுவது. இம்மூன்று பிரச்சனைகளுக்கும் சைவ மற்றும் காய்கறி உணவு முறை மட்டுமே தீர்வாகும். காய்கறிகளை எடுக்கும் முறையில் மூன்று தவறுகளை செய்வதால் அதன் பலன் நமக்கு கிடைப்பதில்லை. அவை பின் வருமாறு:- 1. ஒன்று நாம் தேர்ந்தெடுக்கும் காய்கறிகள் வகை அதாவது வெண்பூசணி, கத்திரி, கொத்தவரை, புடலை, அரசாணி, கோவக்காய், முருங்கை, பீர்க்கங்காய், தேங்காய், எலுமிச்சை, வெண்டை மற்றும் வாழை என நம் நாட்டு காய்கறிகளாக இருக்கவேண்டும். கேரட், பீட்ரூட், உருளை ஆகியவை கிழங்கு வகையை சார்ந்தது. அவை நம் நாட்டு கிழங்கோ காய்கறியோ அல்ல. 2. இரண்டாவது, காய்கறிகளை வறுக்கக்கூடாது. பாதியளவு வேக வைக்கலாம் அல்லது அரைத்து சாறாக பருகலாம் அல்லது அப்படியே பச்சையாக சாப்பிடலாம். வறுத்து உண்பதால் முற்றிலும் அதன் ஊட்டச்சத்தை இழப்பது மட்டுமல்லாது. வாய்வு பிடிப்பு, சளி தொல்லை, ஒவ்வாமை, அஜீரணம், அசதி, மூச்சுத் திணறல் ஆகிய எதிர்மறை பலன்களைத் தர காரணமாகிறது. அதனால் சுவைக்கு முக்கியத்துவத்தை தவிர்த்து ஆரோக்கியத்தின் அடிப்படையில் சமைக்க பழக வேண்டும். 3. காயை மிளகுடன் சேர்த்து சமைப்பதால் காய்கறி என்ற சொல் உருவானது. மிளகு எந்த காயையும் செரிக்கவைத்துவிடும். மிளகை விட்டு விட்டு மிளகாயை போட்டு சமைத்தால் செரிப்பதற்கு பதிலாக உடலில் உள்ள பாகங்களை அரித்து தின்று விடும். அதனால் பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை பயன்படுத்தினால் நிச்சயம் நமக்கு நல்லது நடக்காது. இது சத்தியம். பெரும் சக்தி படைத்த காய்கறிகளை தவறான கருத்து மற்றும் தவறான முறையில் சமைப்பதால் அதன் பலன் அறியாது புரியாது உணராது இறுதியில் ஏமாற்றம் மற்றும் பண விரயத்தை மட்டுமே எதிர்கொள்கிறோம். அதனால் தேடுதலை நிறுத்திவிட்டு முறையாக செயல்பட ஆரம்பிப்போம். எந்த பண்பாடு மற்றும் கலாச்சாரம் நம்மை வாழவைத்ததோ அதே கலாச்சாரத்தை அறமாக கருதி நாம் அறந்தாங்கிகளாக மாறவேண்டும். எந்த பூமியின் மேல் நாம் நின்று கொண்டிருக்கிறோமோ அந்த பூமியானது நம்மை அரவணைத்து காப்பதில் தாயாக இருக்கிறாள். இதுவன்றி வேறு எந்த தொழில்நுட்பமும் நம்மை வல்லரசாக்காது. நம் மண்ணை மதிப்போம். நம் மண்ணை காத்திடுவோம். மண் வாசனையில் திளைத்திடுவோம். பாரதத்தாயை வணங்கிடுவோம்.
- 132, Co-operative Colony, Rajalakshmi Mill Bus Stop, Uppilipalayam, Near Trichy Road
Coimbatore